Thursday, October 29, 2009

கடவுள் எங்கே இருக்கின்றார்




எங்கு தேடுகிறாய் என்னை?


நான் உன்னோடு தான் இருக்கிறேன்.


யாத்திரைகளில் அல்ல,


உருவங்களிலும் அல்ல,


தனிமையில் அல்ல,


ஆலயங்களில் அல்ல,


மசூதிகளில் அல்ல,


காபாவிலும் கைலாயத்திலும்


அல்ல,நான் உன்னோடு இருக்கிறேன் மானிடா,


உன்னோடு தான் இருக்கிறேன்.


பிரார்த்தனைகளில் அல்ல,


தவத்தினிலும் அல்ல,


விரதத்தில் அல்ல,


துறவிலும் அல்ல,


இயக்கச் சக்திகளில் அல்ல,


உன் உடலிலும் அல்ல,


அகண்ட வெளியில் அல்ல,


இயற்கையின் கருவிலும் காற்றின் மூச்சிலும் அல்ல,


கவனத்துடன் தேடிப் பார்,


கண நேரத்தில் கண்டு கொள்வாய் என்னை.


சொல்கிறான் கபீர், கவனமாய்க் கேள்,


உன் நம்பிக்கை எங்கிருக்கிறதோ,


அங்கெல்லாம் நானிருக்கிறேன்.

என்றும் நம்பிகையுடன் உங்கள்
பால்கி (BALAKRISHNAN)

1 comment: