Wednesday, November 18, 2009

காதல் சொன்ன நேரம்


மார்கழி குளிர் நாள் மாலைநேரம்
மஞ்சள் தங்கமாய் வெயில் காயும்
பட்சிகள் எல்லாம் கூடு சேரும்
பார்வையில் மட்டும் எடை கூடும்

மஞ்சள் நிற தேவதையை காணவேண்டி
மதில் சுவர் ஓரம் ஒதுங்கி நின்றேன்
கொஞ்சும் கொலுசு ஒலிசப்தம் கேட்க்க
குளிரிலும் எந்தன் தேகம் வேர்க்க

நெஞ்சு கூட்டுக்குள் தீபிடிக்க
நின்றேன் நானும் உயிர் துடிக்க
நெருங்கி நீ வந்து நின்ற நேரம்
இரும்பு பந்தாய் என் உள்ளம் மாறும்

கனவில் உன்னை பார்க்கும்போது
காதல் பல சொல்லுகின்றேன்

இன்னும்சொல்வேன்


காதலுடன்
பால்கி (பாலகிருஷ்ணன்)

Monday, November 16, 2009

கனவுகளின் களம்


காதல் என்பது கனவுகளின் களம்
அதில் தப்பி செல்ல எனக்கு இல்லை பலம்
தேர்ந்த நடிகனை போல் இமை நடிக்கும்
திறந்து இருப்பது போல் ஒரு தோற்றம் இருக்கும்
திறந்தா விழி முன் ஒரு திரை விரியும்
திங்கள் போல் உந்தன் விழி தெரியும்

பூ , புற , புல்வெளி ,பனித்துளி, மட்டுமல்ல
பொசுக்கும் வெயில் , பொல்லா மாலை
எல்லாவற்றிலும் உன் முகம்
கொல்லாமல் கொல்லுதடி
நில்லாமல் என் நினைவு
உன் பின்னாலே செல்லுதடி

தூக்கமே இல்லையடி
இதயம் துடிப்பதும் இல்லையடி
உன் நினைவை குடிப்பது ஒன்றுமட்டும்
என் வேலையாய் ஆனதடி

படித்ததும் மறந்ததடி
பார்வையில் பழுது ஒன்றும் இல்லையடி
நினைத்தது ஒன்று இருக்க
செய்யும் செயல் வேறு ஆனதடி

கனவுகள் மட்டும் வாழ்வதனால்
காதலை எனக்கு பிடிகின்றது
கண்மணி உனக்கும் இதுபோல
கனவுகள் உண்ட சொல்வாயா
காதலுடன்
பால்கி(balakrishnan)

Tuesday, November 3, 2009

கொஞ்சம் காதல் பேசுவோம் தோழி


என்று நாம் சந்தித்தோம் ?

எங்கு நாம் சந்தித்தோம் ?

என்று உனக்கு நினைவு உள்ளதா

அன்று நீ அணிந்து இருந்த கைவளை

நிறம் கூட எனக்கு நினைவில் உள்ளது


உன் கண்களை பார்க்க கூட எனக்கு துணிவு இல்லை

ஆகவே உன் கைகளை பார்த்தேன்

முதலில் பேசிய போது என் எல்லாகேள்விக்கும்

மௌனத்தை மட்டுமே பதிலாக தந்தாய்


ஆனால் உன் மௌன ஆயுதத்தின் முன்

என் எல்லா படைகளும் செயல் அற்று போனது

உன் நாணவிழிகளின் முன் நான் ஒரு அடிமை போல்

செயல் அற்று விழுந்தேன்


உன் பேச்சின் மென்மை என்னை

பலமாய் தாக்கி காயபடுதியது

ரணம் வலிக்கும் -ஆனால் உன்னால் பட்ட ரணம்

எனக்கு இனித்தது என்று உனக்கு தெரியாது


முதன் முதலாய் உன் விரல் தொட்ட சமயம்

முழுதாய் ஒரு பூகம்பம் என் இதயத்தில் உணர்ந்தேன்

பல நூறு வார்த்தை கொண்டு ஒரு

கவிதை மலை தொடுப்பேன்


உன்னிடம் கொடுக்க ஓடி நான் வருவேன்

என் செய்ய உன் விழி என்னும்

ஏவுகனை பட்டவுடன் கவிதை

வரியாய் ........

வார்த்தையாய்...........

எழுத்தாய் .............

கோடாய்..............

புள்ளியாய்..........மாறி

மறைந்து போகின்றது



உனக்கும் இது போல் இருந்தா?

சொல்வாயா ?

நீ எனக்கு .................


இன்னும்காதல் பேசலாம் .......


காதலுடன் அன்பு

பால்கி (BALAKRISHNAN)