Wednesday, November 18, 2009

காதல் சொன்ன நேரம்


மார்கழி குளிர் நாள் மாலைநேரம்
மஞ்சள் தங்கமாய் வெயில் காயும்
பட்சிகள் எல்லாம் கூடு சேரும்
பார்வையில் மட்டும் எடை கூடும்

மஞ்சள் நிற தேவதையை காணவேண்டி
மதில் சுவர் ஓரம் ஒதுங்கி நின்றேன்
கொஞ்சும் கொலுசு ஒலிசப்தம் கேட்க்க
குளிரிலும் எந்தன் தேகம் வேர்க்க

நெஞ்சு கூட்டுக்குள் தீபிடிக்க
நின்றேன் நானும் உயிர் துடிக்க
நெருங்கி நீ வந்து நின்ற நேரம்
இரும்பு பந்தாய் என் உள்ளம் மாறும்

கனவில் உன்னை பார்க்கும்போது
காதல் பல சொல்லுகின்றேன்

இன்னும்சொல்வேன்


காதலுடன்
பால்கி (பாலகிருஷ்ணன்)

2 comments: