அணிய நல்ல சட்டை இல்லை
அனா காசும் கையில் இல்லை
தலையில் எண்ணெய் இல்லை
தாங்காத வறுமை தொல்லை
ஊர் என்னைஒதுக்கியது
ஓடவிட்டு விரட்டியது
சுற்றம் எல்லாம் என்னை
சுற்றி நின்று ஏளனம் செய்தது
சூனியமாய் வாழ்கை தெரிய
சுடும் தீயாய்உறவு எரிய
செத்துவிட முடிவுஎடுத்து
சென்றேன் கடைவீதி
சாகும் போதும் சுகம் தேடும்
சாமானிய மனிதன் தான் நான்
வலியே இல்லாமல் சாக
வாங்கினேன் தூக்க மருந்து
துக்கம் நெஞ்சு அடைக்க
கண்ணீர் விழி மூட
எடுத்தேன் மருந்தை
என் வாழ்வின் கடைசி விருந்தை
கண்கள் மயங்க கட்சிகள் மறைய
கடைசியாய் ஒரு உருவம் கலங்கலாய்
கண் விழித்து பார்க்கிறேன்
நிற்கின்றன் என் நண்பன்
பத்து நாள் சிகிச்சை
உடலுக்கும் மனதுக்கும்
பயம் தெளியவைத்து
பார்வையை விரியவைத்து
இன்று நான் மனிதனாய்
நிற்கின்றேன் தெளிவாய்
எனக்கு தீர்ந்தது பிணக்கம்
அந்த நடப்புக்கு ஒரு வணக்கம்!
என்றும் அன்புடன் உங்கள்
பால்கி (பாலகிருஷ்ணன்)
Thursday, August 20, 2009
Subscribe to:
Post Comments (Atom)
//கட்சிகள் மறைய //
ReplyDeleteகட்சிகள் அல்லது காட்சிகள்?
நல்ல கவிதை.. ஆனால் ஏனிந்த சோகம்?