Sunday, August 2, 2009

அவனுக்காய் ஒரு பிராத்தனை

அவனுக்காய் ஒரு பிராத்தனை

கணப்பொழுது உன் கண்களை மூடி -கடந்த
காலத்தை சிந்தனையில் நிறுத்து
உன் வாழ்கை பாதை
உன் உழைப்பு
உன் உயர்வு
உன்செல்வம்
உன் தோல்வி
உன் வெற்றி
உன் கண்ணீர் என
உன் அத்தனைநிகழ்வுகளிலும்
உன்னுடன் உனக்காய் உனதாய் இருந்த
ஒரு உறவு எது என்று யோசித்து பார்
ஏதேனும் ஒரு நண்பன் இருப்பான்
அவனுக்காய் ஒரு பிராத்தனைஇன்றேனும் செய்
அந்த நண்பன் நான் என்றால்
என் பாசத்தின் கண்ணீர்
பரிசாய் உனக்கு இல்லை
என்றாலும் நான் தவம் இருப்பேன் அதற்கு

என்றும் அன்புடன் உங்கள்

பால்கி (பாலகிருஷ்ணன்)

1 comment: