Wednesday, August 19, 2009

வாழ்வில் வெற்றி எங்கே கிடைக்கும்

வாழ்வில் வெற்றி எங்கே கிடைக்கும் ?
விலை என்ன ?
விற்பவர் யார் ?
எண்ணிக்கையா ?
எடையா ?
படி கணக்கா ?
மொத்தமா ?
சில்லறையா ?
முழு தொகையா ?
தவணை முறையா ?
புரியவில்லை என்று
பல நாளாய் தேடி பலன் ஒன்றும் இல்லை
புத்தன்சயனித்த போதி மரத்தடி
சித்தம் தெளிய சிறிது நேரம் கண் அயர
பொறிகள் கலங்க பொட் என்று ஓர் அடி
பின் மண்டையில் விழுந்தது
பட்ட அடி உணர
பய பந்து நெஞ்சு உருள
சட் என்று விழித்தேன் - எதிரில் புத்தன் அவன்
சம்மணமிட்டு அமர்ந்து சந்தமாய் சிரிகின்றான்
கேள்வி கணைகளை மாலையாய் தொடுத்து
கொடுத்தேன் புத்தனிடம்-
கிழித்து அதை குப்பையில் எரிந்துவிட்டன்
ஏன் என்றேன் -நீ என்றான்
புரியாமல் தயங்கி நின்றேன்
புத்தனே பகறலாணன்
"உனக்குள்ளே உண்டு அது
ஊருக்குள் தேட வேண்டாம்
கையிலே வெண்ணை வைத்து
காடு எங்கும் நெய் தேடும்
மூடனை போல நீ வெளியில் தேடுகின்றாய்
வெற்றியின் ரகசியத்தை ...............

6 comments: