Tuesday, June 23, 2009

பால்கிஇன் குட்டி கவிதைகள்

வீரிட்டு அழுதும் வேண்டாம் என சொல்லியும்
விட்டு விட்டு வருகிறாள் அன்னை
பாலர் பள்ளியில் என்னை

அடித்து குத்தி உருட்டி புரட்டி
அரைமணி நேரம் கழித்து சொன்னாள்
சப்பாத்தி மாவு சரியான பதம் என்று

சாவு நாள் தெரிந்தும் பின்னும்
சந்தோசம்மாக உள்ளதே
பட்டாம்பூச்சி

வைரஸ் தாக்கி மரித்த பின்னும்
மீண்டும் உயிர்த்து
கணணி (computor)

சினிங்கி கொண்டே கூடவே வந்தாலும்
சிறிதும் கோபம் வரவில்லை
கைபேசி (mobile phone)

1 comment: