தீ யின் சாம்பலில் அனலின் சூட்டில்
அழிந்தது காடு என்று எண்ணியவர் வருந்தவும்
எங்கே என் நண்பன் இனி மீண்டும் வருவனா?
என்று ஏங்கி இருந்தவர்கள் மகிழவும்
சாம்பலில் குவியலில் ஒரு புழுதி எழுந்தது
புயல் போலவந்த புகை முட்டத்தின் நடுவில் இருந்து
மீண்டும்வந்தது ஒரு பறவை
மீண்டு வந்தது ஒரு பறவை
அதை போல் நானும் என்னை எரித்த கவலைகளை யும் ,
சோகம் என்னும் சம்பலையும் கடந்து வந்துவிடேன்
நண்பர்களே காலம் இனி வெல்லும்
என்றும் அன்புடன் பால்கி (பாலகிருஷ்ணன்)